பூங்காவுக்குள் காதலனுடன் சென்ற இளம்பெண்…பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பல்!

 

பூங்காவுக்குள் காதலனுடன் சென்ற இளம்பெண்…பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பல்!

இவருக்கும் அதே கடையில் வேலைபார்த்து வரும் காட்பாடியை சேர்ந்த இளைஞருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள  கிராமத்தை 24 வயது பெண் ஒருவர் அதே பகுதியில் ஜவுளி கடை ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார்.  இவருக்கும் அதே கடையில் வேலைபார்த்து வரும் காட்பாடியை சேர்ந்த இளைஞருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.

ttn

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் பூமுடிந்து அங்குள்ள பூங்காவுக்கு சென்றுள்ளனர். பூங்கா பூட்டிய பிறகு இருவரும் சென்றதை கண்ட 3 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த நகைகளை பறித்துள்ளனர்.  மேலும் அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளனர். இதனால் அந்த பெண் கூச்சலிட்டு கத்த, காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்து வெளியில்  சொல்ல கூடாது என்று கூறியுள்ளனர்.

ttn

இதையடுத்து வீடு திரும்பிய அந்த பெண்ணை கண்ட அவரது பெற்றோர் அவரின் முகத்தில் இருந்த காயம், நகைகள் இல்லாததைப்  பார்த்து அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த பெண் அழுதுகொண்டே நடந்ததைக்  கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மகளை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

ttn

புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் பூங்காவை ஒட்டியுள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை  ஆய்வு செய்தனர்.  இந்த குற்றச்சம்பவத்தில்  வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர்கள்  ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதில் ஒருவர் பிடிபட்ட நிலையில் தலைமறைவான மற்ற இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.