பூங்காவில் இருந்த காதல் ஜோடி: அரிவாளால் வெட்டிய மர்ம நபர்: உண்மை நிலவரம் என்ன?

 

பூங்காவில் இருந்த காதல் ஜோடி: அரிவாளால் வெட்டிய மர்ம நபர்: உண்மை நிலவரம் என்ன?

கும்பகோணம்: பூங்காவில் இருந்த காதல் ஜோடியை மர்ம நபர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயப் பூங்காவில் காதலர்கள்  குருமூர்த்தி – ராஜலட்சுமியும் நேற்று இரவு பூங்காவிற்கு சென்றுள்ளனர். அப்போது  பூங்காவிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பி விட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இவர்களது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்தனர். பின்பு படுகாயமடைந்த அவர்களை ஆம்புலன்ஸை வரவழைத்து,  கும்பகோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜலட்சுமிக்கு தலையில் காயம் பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குருமூர்த்தி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த அரிவாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆணவ கொலை முயற்சிக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது . வெட்டி விட்டுத் தப்பிய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.