புழல் சிறையில் கொரோனாவா? புலம்பி தவிக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்!

 

புழல் சிறையில் கொரோனாவா? புலம்பி தவிக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்!

புழல் சிறையில் கொரோனா தொற்று இருப்பதாக வெளிவரும் செய்திகள் பதற்றத்தை தருகிறது என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 

புழல் சிறையில் கொரோனா தொற்று இருப்பதாக வெளிவரும் செய்திகள் பதற்றத்தை தருகிறது என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 

coronavirus

புழல் சிறையில் உள்ள வங்கதேசத்தை சேர்ந்த 8 கைதிகளுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷை சேர்ந்த அந்த கைதிகளுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. மதப்பிரச்சாரம் செய்ததாக திண்டுக்கல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால்  உள்நோயாளிகளாக அனுமதிப்பட்டுள்ளனர். 

 

 

இந்நிலையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “புழல் சிறையில் கொரோனா தொற்று எனவரும் செய்திகள் பதட்டத்தை தருகிறது.உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் விடுப்பு வழங்கி வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு வாய்ப்பு மறுப்பது வினோதம்.ஏற்கெனவே விடுதலைமுடிவு செய்யப்பட்ட அறிவுக்கு குறைந்தபட்ச விடுப்பு வழங்க எது தடுக்கிறது?” என பதிவிட்டுள்ளார்.