புழல் சிறையில் உள்ள 8 கைதிகளுக்கு கொரோனா தொற்று!

 

புழல் சிறையில் உள்ள 8 கைதிகளுக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்தது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர் எண்ணிக்கை 283 லிருந்து 365 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% என்ற நிலையிலேயே உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.

coronavirus

இந்நிலையில் புழல் சிறையில் உள்ள வங்கதேசத்தை சேர்ந்த 8 கைதிகளுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷை சேர்ந்த அந்த கைதிகளுக்கு ஸ்டேன்லி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. மதப்பிரச்சாரம் செய்ததாக திண்டுக்கல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால்  உள்நோயாளிகளாக அனுமதிப்பட்டுள்ளனர்.