புழல் ஏரியில் நீர் இருப்பு குறைந்ததால் சென்னையில் ஏற்படவிருக்கும் குடிநீர் தட்டுப்பாடு

 

புழல் ஏரியில் நீர் இருப்பு குறைந்ததால் சென்னையில் ஏற்படவிருக்கும் குடிநீர் தட்டுப்பாடு

கோடை வெயிலின் தாக்கமும், போதிய மழையின்மை காரணமாகவும் தமிழத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களான சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் வறண்டு வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்ப புழல் ஏரியில் ராட்சத குழாய்கள் மற்றும் 11 மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு சென்னை குடிநீர் வாரியத்திற்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

கோடை வெயிலின் தாக்கமும், போதிய மழையின்மை காரணமாகவும் தமிழத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களான சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் வறண்டு வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்ப புழல் ஏரியில் ராட்சத குழாய்கள் மற்றும் 11 மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு சென்னை குடிநீர் வாரியத்திற்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

CC

இந்நிலையில் தற்போது ஏரியில் முற்றிலுமாக நீர் வறண்டு போனதால் அதன் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில் தற்போது 9 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதனால், சென்னை குடிநீர் வாரியத்திற்கு வினாடிக்கு 21 கன அடி நீர் மட்டுமே அனுப்பப்படுகிறது. இதையடுத்து கால்வாய் வழியாக தண்ணீர் வர, ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

DD

இதற்கிடையே குடிநீர் தட்டுப்பாட்டை ஈடுசெய்யும் நோக்கில் பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் பெற்று அனுப்பும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.