புழலில் அபிராமி தற்கொலை முயற்சி

 

புழலில் அபிராமி தற்கொலை முயற்சி

காதலுக்காக தனது 2 குழந்தைகளை கொன்றதால் கைது செய்யப்பட்டிருக்கும் அபிராமி புழல் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: காதலுக்காக தனது 2 குழந்தைகளை கொன்றதால் கைது செய்யப்பட்டிருக்கும் அபிராமி புழல் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை குன்றத்தூரை  சேர்ந்த வங்கி பணியாளரான  விஜய் என்பவரின் மனைவி அபிராமி. இவருக்கும் அப்பகுதியில் பிரியாணி கடை வைத்திருக்கும் சுந்தரம் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

மேலும் தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்ட அபிராமி, பாலில் விஷம் வைத்து அவர்களுக்கு கொடுத்தார். அதில், கணவர் உயிர் தப்பித்து கொண்டார். ஆனால் இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து, தலைமறைவான அபிராமியும், சுந்தரமும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சிறையில் இருக்கும் அபிராமி தீவிர மன உளைச்சலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் புழல் சிறையில் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.