புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசார் எங்கே இருக்கிறார்?

 

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசார் எங்கே இருக்கிறார்?

மசூத் அசார் குடும்பத்தினருடன் காணாமல் போனதான பாரீசில் நடந்த நிதி நடவடிக்கை குழு மாநாட்டில் பாகிஸ்தான் தெரிவித்தது. மேலும் அவரைத் தேடும் பணிகள் நடப்பதாகவும் அறிவித்தது

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் குண்டு துளைக்காத வீட்டில் பலத்த பாதுகாப்புடன் தங்கியிருப்பதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. 

masood-azhar

மசூத் அசார் குடும்பத்தினருடன் காணாமல் போனதான பாரீசில் நடந்த நிதி நடவடிக்கை குழு மாநாட்டில் பாகிஸ்தான் தெரிவித்தது. மேலும் அவரைத் தேடும் பணிகள் நடப்பதாகவும் அறிவித்தது. இந்திய நிலையில், மசூத் அசார் பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத முகாம் அருகே பலத்து பாதுகாப்புடன் குண்டு துளைக்காத வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருவதாக உந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. புல்வாமாவில் கடந்த ஆண்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் பின்னணியில் இருந்த அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை தேடும் பணிகள் தீவிரமடைந்தன.