புல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு!

 

புல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இன்று காலை நடந்த என்கவுண்டர் ஆபரேஷனில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இன்று காலை நடந்த என்கவுண்டர் ஆபரேஷனில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி சென்ற வாகனத்தைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர்.ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 41 பேர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது.

இதையடுத்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவம் உள்ளிட்ட படைகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை புல்வாமாவில் இருக்கும் பிங்லான் என்ற பகுதியில் தீவிரவாதிகள் சிலர் சுற்றிவளைக்கப்பட்டனர். அவர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை வெடித்தது.சில மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு சண்டை நடந்துவருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.