புல்வாமாவில் 3 அன்சர் காஸ்வா உல் ஹிந்த் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை

 

புல்வாமாவில் 3 அன்சர் காஸ்வா உல் ஹிந்த் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை

புல்வாமாவில் அன்சர் காஸ்வா உல் ஹிந்த் அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீநகர்: புல்வாமாவில் அன்சர் காஸ்வா உல் ஹிந்த் அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டமத்தின் டிரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து ராணுவம், சி.ஆர்.பி.எப் மற்றும் மாநில போலீசார் நேற்று இரவு அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

ttn

இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் அன்சர் காஸ்வா உல் ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு புல்வாமா நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானது நினைவு கூறத்தக்கது.