புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தனது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த பிரபல நடிகர்!

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தனது சொந்த  ஊர்களுக்கு அனுப்பி வைத்த பிரபல நடிகர்!

தங்கி வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் வெளிமாநிலத்தில் இருந்து தங்கி வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

rr

 இந்நிலையில் ‘அருந்ததி’ ‘ஒஸ்தி’, ‘தேவி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சோனு சூட். இவர் ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருபவர்களுக்கு உதவி செய்துள்ளார். அதாவது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக அரசாங்கங்களிடமிருந்து அனுமதி பெற்று சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த பணியாளர்களுக்காக நடிகர் சோனு சூட் பேருந்து ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த பேருந்தில் சில தானேவிலிருந்து நேற்று  கர்நாடகாவின் குல்பர்கா பகுதிக்குச் சென்றது. அப்போது அங்கு நேரில் வந்த சோனு அவர்களை பத்திரமாக வழியனுப்பி வைத்தார். 

rr

முன்னதாக நடிகர் சோனு சூட் ஜூஹூ பகுதியில் இருக்கும் தனது ஹோட்டலை, களப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள தானமாக கொடுத்துள்ளார். மேலும் பஞ்சாபில் இருக்கும் மருத்துவர்களுக்காக 1,500 பாதுகாப்பு உபகரணங்களை இவர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.