புரோஹித் போல் மோசமான ஆளுநரை பார்த்ததில்லை: வைகோ சாடல்

 

புரோஹித் போல் மோசமான ஆளுநரை பார்த்ததில்லை: வைகோ சாடல்

பன்வாரிலால் புரோஹித் போல் இதுவரை மோசமான ஆளுநரை நான் பார்த்ததில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை: பன்வாரிலால் புரோஹித் போல் இதுவரை மோசமான ஆளுநரை நான் பார்த்ததில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யாத ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தருமபுரி மாணவிகளை உயிருடன் எரித்த 3 அதிமுகவினரை விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தார். அவரின் இந்த செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றமே செய்யாத நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் நரக வேதனை அனுபவித்து வருகின்றனர். ஆனால், உயிரோடு 3 அப்பாவி மாணவிகளை எரித்துக் கொலை செய்த 3 அ.தி.மு.க.க்காரர்களை, தமிழக அரசு முன் கூட்டியே விடுதலை செய்துள்ளது. இந்த 3 பேரை விடுதலை செய்வதற்காகத்தான், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன் கூட்டியே விடுதலை செய்வதாக தமிழக அரசு இதுவரை நாடகம் ஆடியுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி நவ.24-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் அறப்போராட்டம் நடைபெறும்.நீதிக்கு எதிராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார். பிரதமர் மோடியின் ஏஜெண்டாக கவர்னர் செயல்படுகிறார். தமிழக வரலாற்றில், இப்படியொரு மோசமான கவர்னரை பார்த்ததே இல்லை என்றார்.