புரொமோஷன் பணிகள் ஒருபுறம்…தர்பார் படத்துக்கு தடை கோரிய வழக்கு மறுபுறம்: லைகா எடுத்த அதிரடி முடிவு!

 

புரொமோஷன் பணிகள் ஒருபுறம்…தர்பார் படத்துக்கு தடை கோரிய வழக்கு மறுபுறம்: லைகா எடுத்த அதிரடி முடிவு!

23 கோடியே 70 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டி இருப்பதால், அதுவரை தர்பார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்

ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்திற்குத் தடைவிதிக்கக் கோரிய வழக்கில் நாளை பதில் அளிப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ttn

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

ttn

இந்த படத்திற்குத் தடை விதிக்க கோரி மலேசியாவைச் சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவில், 2.0 படத்தயாரிப்புக்காக லைகா நிறுவனம் தங்களிடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்ந்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டி இருப்பதால், அதுவரை தர்பார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதையடுத்து இந்த மனு மீது பதில் அளிக்க லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

ttn

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வந்தது.அப்போது லைகா நிறுவன தரப்பில் நாளை விளக்கமளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி ஜெயசந்திரன் வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

ttn

தர்பார் படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்திற்குத் தடைகோரியுள்ள இந்த வழக்கு கோலிவுட்டில் முக்கிய வழக்காகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.