புருஷன் பொண்டாட்டியைப் பிரித்து வைத்த மோடி!
இந்தியா முழுக்க அரசியல் அனல் ஓய்ந்து, அரசியல் தலைவர்கள் எல்லாம் கோடை வெய்யிலில் இருந்து தப்பிக்க, குடும்பத்தோடு குளு குளு டூர் சென்று ரிலாக்ஸ் செய்து வருகிறார்கள்.
மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்து, சுயேட்சையாக போட்டியிட்டு பட்டையைக் கிளப்பிய நடிகர் பிரகாஷ்ராஜ், தேர்தல் முடிவுகளால் பயங்கர அப்செட்
இந்தியா முழுக்க அரசியல் அனல் ஓய்ந்து, அரசியல் தலைவர்கள் எல்லாம் கோடை வெய்யிலில் இருந்து தப்பிக்க, குடும்பத்தோடு குளு குளு டூர் சென்று ரிலாக்ஸ் செய்து வருகிறார்கள்.
மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்து, சுயேட்சையாக போட்டியிட்டு பட்டையைக் கிளப்பிய நடிகர் பிரகாஷ்ராஜ், தேர்தல் முடிவுகளால் பயங்கர அப்செட். மனுஷனுக்கு தான் ஜெயிக்காம தோற்றது கூட பெருசில்லை.. மீண்டும் மோடியே வந்தது தான் பெரிய அதிர்ச்சியாம். ஒரு வழியாய், ரிலாக்ஸ் மோடுக்கு மாறி குடும்பத்தோட ஜம்மு காஷ்மீரில் இருக்கும் குல்மார்க் பகுதிக்கு டூர் போயிருக்கார்.
பிரகாஷ்ராஜ் தங்கியிருந்த ஓட்டலில், அவரைப் பார்த்த ரசிகை ஒருவர் ஆசையாசையாய் ஓடிவந்து, “சார்.. உங்களோட ஒரே ஒரு செல்பி எடுத்துக்கறேன்” என்று அனுமதி கேட்டுள்ளார். அடுத்த ஸ்டேட்ல ரசிகையைக் கண்டால் எந்த நடிகர் தான் செல்பிக்கு ஒத்துக்க மாட்டார்? பிரகாஷ்ராஜூம் பெருந்தன்மையாக சம்மதித்திருக்கிறார். அந்த பெண்ணுடனும், அவருடைய மகளுடனும் சேர்ந்து செல்பியும் எடுத்து கொண்டார். இதுவரைக்கும் எல்லாமே சுபம் தான்.
அதன் பிறகு தான் மோடி ரூபத்தில் சனி, அந்த பெண்ணின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது. தூரத்தில் மெதுவாக அசைந்து அசைந்து ஓட்டலின் வரவேற்பறைக்கு வந்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் கணவருக்கு இந்த செல்பி மேட்டர் தெரிஞ்சதும், மனுஷன் ரொம்பவே சூடாகி விட்டார். சந்தேகப்பட்டு திட்டி இருந்தால்கூட ஒருவகையில் ஒத்துக்கலாம். ஆனால் அவர் மனைவி, மகளுடன் பொது இடத்தில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே சண்டை போட்டதற்கு காரணமே மோடிதான். ஆமாம்.. மோடியேதான்!
A moment in Kashmir… Why do we HURT the ones we LOVE for someone else ?? Why do we HATE because we differ ?? #justasking pic.twitter.com/RurmY369Kd
— Prakash Raj (@prakashraaj) June 15, 2019
பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பிரதமரை விமர்சித்து வருவதால், அவருடன் செல்பி எடுத்தது தவறு என்று சண்டை போட்டிருக்கிறார் கணவர். சுற்றியிருந்த எல்லாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவமானத்தில் கூனி குறுகி அம்மாவும், பொண்ணும் அங்கேயே அழ ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவும், பிரகாஷ்ராஜ் முன்னாடியே நடந்தது தான் ஹைலைட்!
இதைப் பார்த்து ஜெர்க் ஆன பிரகாஷ்ராஜ், அவமானத்தில் தாயும், மகளும் துடிப்பதைப் புரிந்து கொண்டு, பெண்ணின் கணவரை தனியே அழைத்து பேசினார். ”என்னையும், மோடியையும் முன்னிறுத்தியா நீங்க கல்யாணம் செய்துக்கிட்டீங்க? பொது இடத்தில் கட்டின மனைவியை இப்படி அசிங்கப்படுத்துவது தவறு” என்று சொல்லி உள்ளார். இதைக் கேட்டதும், அந்த நபர் விருட்டென்று அங்கிருந்து சென்றுவிட்டாராம். இந்த சம்பவத்தை மறக்க முடியாத பிரகாஷ்ராஜ், ட்விட்டரிலும் இதை பற்றி சொல்லி ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கார்.