புயல் ஏற்படும்போது மரங்கள் சாய்வதுபோல் பிரச்சனை ஏற்படும்போது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

புயல் ஏற்படும்போது மரங்கள் சாய்வதுபோல் பிரச்சனை ஏற்படும்போது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “தமிழகத்தில் பல்வேறு வகையான தொழில்கள் இருந்தாலும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வருகிறார்.

சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “தமிழகத்தில் பல்வேறு வகையான தொழில்கள் இருந்தாலும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வருகிறார். ஆவின் பால் தங்கு தடையின்றி வீடு தேடி வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது மக்கள் அனைவரும் உயிர்வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

rajendra balaji

எதையும் தாங்கிக் கொள்ளும் வலிமை திறமை இந்திய மக்களிடம் உள்ளது என்பதை எடுத்துரைக்கும் விதமாக கொரோனோவை மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். பிரதமரும் முதல்வரும் கொரோனோவிலிருந்து மக்களை பாதுகாப்பார்கள். அரசின் நடவடிக்கையை குறையாக பார்க்காமல் நிறையாக  பார்த்து மக்கள் பெருமைப்பட வேண்டும். அரசின் நடவடிக்கையை அரசியலுக்காக சிலர் விமர்சித்தாலும் ஊரடங்கை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

நெசவு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், புயல் ஏற்படும்போது மரங்கள் சாய்வதுபோல் பிரச்சனை ஏற்படும்போது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்” என பதிலளித்தார்.