புன்னைநல்லூர் மாரியம்மன் : தெப்ப மகோற்சவ விடையாற்றி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது

 

புன்னைநல்லூர் மாரியம்மன் : தெப்ப மகோற்சவ விடையாற்றி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தெப்ப மகோற்சவ விடையாற்றி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

 புன்னைநல்லூர்:

 புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தெப்ப மகோற்சவ விடையாற்றி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

punnai nalllur 1

தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தெப்ப மகோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான தெப்ப மகோற்சவ விழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்தது .அதனை தொடர்ந்து நேற்று இரவு முக்கிய வைபவமான தெப்ப மகோற்சவ விடையாற்றி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

தஞ்சை அருகே புன்னைநல்லூரில் அமைந்து உள்ள மாரியம்மன் கோவிலில் தெப்ப மகோற்சவ விழாவையொட்டி நேற்று விடையாற்றி உற்சவம் நடைபெற்றது இதையொட்டி மாரியம்மன் ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

Punnai Nallur 2

 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மிகவும் விரிவாக செய்து இருந்தனர்.