‘புன்னகை மன்னன்’ பட பாணியில் மலையில் இருந்து குதித்த காதல் ஜோடிகள்

 

‘புன்னகை மன்னன்’ பட பாணியில் மலையில் இருந்து குதித்த காதல் ஜோடிகள்

பெங்களூருவில் ‘புன்னகை மன்னன்’ படத்தைப் போலவே பெற்றோர்கள், தங்களது காதலை ஏற்காததால் தற்கொலை செய்துக் கொள்ள மலையிலிருந்து காதல் ஜோடிகள் கீழே விழுந்தனர். மரத்தின் கிளைகளில் இருவரும் விழுந்ததால், கால்கள் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பெங்களூருவில் ‘புன்னகை மன்னன்’ படத்தைப் போலவே பெற்றோர்கள், தங்களது காதலை ஏற்காததால் தற்கொலை செய்துக் கொள்ள மலையிலிருந்து காதல் ஜோடிகள் கீழே விழுந்தனர். மரத்தின் கிளைகளில் இருவரும் விழுந்ததால், கால்கள் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பெங்களூரு அருகே ஆவலஹள்ளியை சேர்ந்தவர் ராகேஷ். பெங்களூரு ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா. இவர்கள்  இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்து, இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது காதலைப் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாததால் மன உளைச்சலில் இருந்த ராகேசும், ஐஸ்வர்யாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

வாழ்வில் ஒன்று சேர பெற்றோர் ஒத்துழைக்காததால், சாவில் ஒன்று சேர முடிவெடுத்த காதல் ஜோடி, பெங்களூரூ புறநகரில் உள்ள மலைப்பகுதிக்குச் சென்று மலை மீது ஏறினார்கள். 

அதன் பின்னர் மாலை நேரம் நெருங்கியதும் ராகேசும், ஐஸ்வர்யாவும் திடீரென்று கீழே குதித்தனர். மலையின் அடிவாரத்தில் இருந்த மரத்தின் கிளைகளில் இருவரும் விழுந்ததால், இவர்களின் கால்கள் முறிந்ததுடன், பலத்த காயம் அடைந்து மரத்தின் கிளைகளில் தொங்கியப்படியே உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள்.

இதை பார்த்து அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, இருவரையும் மீட்டு, ராமநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  போலீஸ் விசாரணையில், திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மலையின் மேலிருந்து கீழே குதித்து இருவரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.