‘புன்னகை மன்னன்’ பட பாணியில் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: இவங்க வயசு என்ன தெரியுமா?

 

‘புன்னகை மன்னன்’ பட பாணியில் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி:  இவங்க வயசு என்ன தெரியுமா?

துப்பட்டாவால் கட்டிக்கொண்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த கோவிந்தராசுவின் மகன் இவரது மகன் சிவரஞ்சன் கீழகல்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான அபிராமி என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

love

இதையடுத்து சிவரஞ்சனும் அபிராமியும் பொது அடிக்கடி தனியாகச் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் அவர்களது வீட்டிற்கு தெரியவர இரு வீட்டாரும் இவர்களை கண்டித்ததுடன் அவர்களைச் சந்திக்க விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.  

love

இந்நிலையில்  நேற்று முன்தினம் வீட்டிற்குத் தெரியாமல் வேந்தன் என்பவரது விளைநிலத்தில் இருவரும் தனிமையில் பேசி வந்துள்ளனர். இதை கண்ட வேந்தன் காதல் ஜோடியை விரட்டியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து  2 பேரையும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இது குறித்துத் தகவலறிந்த வேந்தன் விளைநிலத்தில் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த கிணற்றின் ஓரம் செருப்புகள் கிடந்துள்ளது. 

well

இதனால் சந்தேகமடைந்த வேந்தன் அவர்களது பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள்  கிணற்றில் இறங்கித் தேடினர். அப்போது சிவரஞ்சனும், அபிராமியும் துப்பட்டாவால் உடலைக் கட்டிய நிலையில், சடலமாக கிடந்துள்ளனர். 

crime

பின்னர் இருவரது உடலையும் கிணற்றிலிருந்து மீட்ட போலீசார், அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவர்கள் இருவரும் இந்த விபரீத முடிவையோ எடுத்துள்ளது தெரியவந்தது. படிக்கும் வயதில் மாணவர்கள் இருவர் காதலைக் காரணம் காட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.