புன்னகை மன்னன் படத்தில் முத்தக் காட்சி இருப்பதே எனக்குத் தெரியாது… ரகசியத்தை வெளியிட்ட நடிகை ரேகா!
இப்போதெல்லாம் படத்தில் முத்தக்காட்சிகள் இருப்பது சகஜமாகிவிட்டது. முத்தக்காட்சி இல்லை என்றால் தான் ஆச்சர்யம். ஆனால் முந்தைய கால கட்டத்தில் அப்படி இல்லை. முத்தம் என்றாலே கண்ணை மூடிக்கொள்ளும் சந்ததியினர். ஒரு படத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும், முத்தமிடும் காட்சிகளை பார்த்து நாம் ரசித்திருப்போம். ஆனால், அந்த காட்சிகளுக்கு பின்னால் நடந்த கதைகள் நமக்கு தெரியாது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட நடிகை ரேகாவிடம் புன்னகை மன்னன் படத்தைப் பற்றி கேட்டதற்கு அவர் அளித்திருக்கும் பதில் வைரலாகி வருகிறது.
இப்போதெல்லாம் படத்தில் முத்தக்காட்சிகள் இருப்பது சகஜமாகிவிட்டது. முத்தக்காட்சி இல்லை என்றால் தான் ஆச்சர்யம். ஆனால் முந்தைய கால கட்டத்தில் அப்படி இல்லை. முத்தம் என்றாலே கண்ணை மூடிக்கொள்ளும் சந்ததியினர். ஒரு படத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும், முத்தமிடும் காட்சிகளை பார்த்து நாம் ரசித்திருப்போம். ஆனால், அந்த காட்சிகளுக்கு பின்னால் நடந்த கதைகள் நமக்கு தெரியாது.
நடிகை ரேகா, புன்னகை மன்னன் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் இருந்த முத்தக் காட்சி குறித்து சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். தி நியூஸ் மினிட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 1986 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படப்பிடிப்பில் இருந்த முத்தக் காட்சி குறித்து தனக்கு தெரிவிக்கவில்லை எனவும் அவரது அனுமதி இல்லாமல் முத்தக்காட்சி எவ்வாறு படமாக்கப்பட்டது என்பதையும் கூறினார்.
புன்னகை மன்னன் படத்தில் பிரபலமான தற்கொலை காட்சியில் கமல்ஹாசன் ரேகாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுப்பார். அந்த முத்தக் காட்சி படத்தில் இருப்பது தனக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்று அதிர்ச்சித் தகவல் அளித்தார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இது பணியிடத்தில் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் என்று கூறி வருகின்றனர்.
WTF!
This would have made the headlines if it happened in Hollywood. This is proper ‘sexual harassment at the workplace’. Worst is, they’ve even planned it.
But since it’s Kamal saaaaar and Balachandar saaaaar, it should be fine I guess. pic.twitter.com/alPAC7eXJy
— Sangeeth (@Sangeethoffcl) February 23, 2020
“இதை நான் நூறு முறை சொல்லிவிட்டேன். அவர்கள் முத்தக்காட்சியை எனக்குத் தெரியாமல் படமாக்கினர். மக்கள் என்னிடம் இதே கேள்வியைக் கேட்கிறார்கள், அதற்கு பதிலளித்தே நான் சோர்ந்துவிட்டேன், அப்போது எனக்கு 16 வயது தான் ஆகியிருந்தது. பாலசந்தர் என்னிடம் இது சாதாரணமானது தான். மோசமானதல்ல, ஏனெனில் இந்த இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலான அன்பையும் பிணைப்பையும் நாம் காட்ட வேண்டும்” என்றதாகக் கூறினார்.
திரையில் சரியான உணர்ச்சிகளைக் கொண்டுவர முத்தம் எவ்வாறு உதவியது என்பதையும் ரேகா கூறினார்., “முத்தம் திரையில் அசிங்கமாக அல்லது அருவருப்பாகத் தெரியவில்லை. அதற்கு ஒரு தேவை இருந்தது, ஆனால் அப்போது நான் மிகவும் இளம்பெண், அது பற்றி எனக்குத் தெரியாது. இயக்குனர், ‘கமல், கண்களை மூடு! நான் சொன்னது நினைவிருக்கிறதா, இல்லையா? என்று கமல்ஹாசனிடம் சொன்னார். பின்னர் அவர் 1, 2, 3 என்று சொன்னபோது நாங்கள் குதிக்க வேண்டியிருந்தது … அதேபோல் நாங்கள் முத்தமிட்டோம், பின்னர் குதித்தோம். நான் அந்த காட்சியை தியேட்டரில் பார்த்த போது தான் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எனக்குப் புரிந்தது என்றார்”.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பாலச்சந்தரை விமர்சித்தனர். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் இவ்வாறு செய்ததற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.