புன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு

 

புன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு

நடிகை சினேகா- பிரசன்னா தம்பதியினருக்கு இன்று இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. 
என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை சினேகா. தமிழ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகா முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், கமல், சூர்யா, தனுஷ் என பலருடனும் இணைந்து நடித்தார். இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் முதல் குழந்தை பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து சினேகா மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் கர்ப்பமானார். 

 

 

ஏற்கனே சினேகா – பிரசன்னா தம்பதியினருக்கு ஒரு ஆண்குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பிரசன்னா “தை மகள் வந்தாள்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.