புனித் ராஜ்குமார் வீட்டில் வருமான வரி சோதனை

 

புனித் ராஜ்குமார் வீட்டில் வருமான வரி சோதனை

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிடோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிடோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகை யாஷ், சுதீப் உள்ளிடோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் கிடைத்த நிலையில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெங்களூரில் மொத்தமாக 10-க்கும் மேற்பட்ட திரை பிரபலங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் கன்னட திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.