புத்தாண்டு நள்ளிரவில் போலீசுக்கு போன் செய்து கதறிய பெண்…விசாரணையில் வெளியான உண்மை!

 

புத்தாண்டு நள்ளிரவில் போலீசுக்கு போன் செய்து கதறிய பெண்…விசாரணையில் வெளியான உண்மை!

ஆவடியை அடுத்த கரிமேடு அருகே உள்ள எம்.ஜி.ஆர் தெருவுக்கு போலீசார் விரைந்துள்ளனர். 

சென்னையில் புத்தாண்டு அன்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்துள்ளது.  அதில் பேசிய பெண் ஒருவர், இளைஞர் ஒருவர் என் வீட்டுக்குள் புகுந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகத் தெரிவித்துவிட்டு போனை கட் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் போன் நம்பரை டிராக் செய்து அந்த முகவரியான  ஆவடியை அடுத்த கரிமேடு அருகே உள்ள எம்.ஜி.ஆர் தெருவுக்கு போலீசார் விரைந்துள்ளனர். 

ttn

விசாரணையில் அந்த பெண்ணிடம் தவறாக நடந்தது அதே பகுதியை சேர்ந்த  முகேஷ் என்பது தெரியவந்துள்ளது.  அப்பெண்ணுக்கும், முகேஷுக்கும் முன்விரோதம் இருந்ததால் அவர் அப்பேணிந்தம் அத்துமீறியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முகேஷை போலீசார் கைது செய்தனர். 

ttn

அப்பெண்ணின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அப்பெண் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் போலீசார் அப்பெண்ணிடம்  ‘காவலன் செயலி’ குறித்த தகவலையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.