புது எம்பிக்களில் முதலில் ‘உள்ளே’ போகப்போறது யார் தெரியுமா?

 

புது எம்பிக்களில் முதலில் ‘உள்ளே’ போகப்போறது யார் தெரியுமா?

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்களில் முதலில் சிறைக்குப் போகப்போகிறவர் ஒரு பகுஜன் சமாஜ்வாடி கட்சி எம்பிதான்.என்ன வழக்கு தெரியுமா? பாலியல் பலாத்கார வழக்கு! 

உத்திரப்பிரதேச மாநிலம் கோஷி தொகுதியில் வென்று எம்பி ஆகியிருப்பவர் அதுல் ராய்.இவர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிட்டதாக வாரணாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த மே 1-ம் தேதியே போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விட்டார்கள்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்களில் முதலில் சிறைக்குப் போகப்போகிறவர் ஒரு பகுஜன் சமாஜ்வாடி கட்சி எம்பிதான்.என்ன வழக்கு தெரியுமா? பாலியல் பலாத்கார வழக்கு! 

உத்திரப்பிரதேச மாநிலம் கோஷி தொகுதியில் வென்று எம்பி ஆகியிருப்பவர் அதுல் ராய்.இவர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிட்டதாக வாரணாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த மே 1-ம் தேதியே போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விட்டார்கள்.

athul rai

தன்னுடைய மனைவியை சந்திக்க வேண்டும் என்று சொல்லி தன்னை வீட்டுக்கு அழைத்துப்போய் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிவிட்டதாக அதுல் ராய் மீது குற்றம் சாட்டி இருக்கிறார் அந்த மாணவி.இதை மறுத்து ,தன்னை கைது செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று அதுல் ராய் உச்சநீதிமன்ற விடுமுறை அமர்வின் முன்பு மனுச்செய்திருந்தார்.

நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்,அநிருந்தா போஸ் அமர்வின் முன்னால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரிக்க போதிய முகாந்திரமில்லை என்று நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ததுடன்,அதுல் ராயை கைது செய்ய தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.

ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 30% பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அனைவரையும் முந்திக்கொண்டு அதுல் ராய்தான் இந்த சீசனில் கைதாகும் முதல் எம்.பியாக இருப்பார் என்று தெரிகிறது!