‘புது எண்ணில் இருந்து கால் வந்ததும் வெடித்து சிதறிய போன்’.. இளைஞர் கூறிய பதிலால் அதிர்ந்து போன குடும்பத்தினர்!

 

‘புது எண்ணில் இருந்து கால் வந்ததும் வெடித்து சிதறிய போன்’.. இளைஞர் கூறிய பதிலால் அதிர்ந்து போன குடும்பத்தினர்!

குப்பையில் இருந்த ஒரு வெடிபொருள் வெடித்து சிதறியதில்  வெங்கடேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வசித்து வரும் வெங்கடேசன்(32) என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு என் குழந்தை உள்ளது. இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் புகைபிடிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் குப்பையை கொளுத்தி விட்டுள்ளார். அப்போது குப்பையில் இருந்த ஒரு வெடிபொருள் வெடித்து சிதறியதில்  வெங்கடேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வழியில் துடித்த வெங்கடேசனின் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

ttn

அப்போது காயம் எவ்வாறு ஆனது என்று மருத்துவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், என் போனுக்கு புதிய நம்பரில் இருந்து கால் வந்தது. நான் அதனை அட்டென்ட் செய்வதற்குள் என் போன் வெடித்து சிதறி விட்டது. என்று கூறியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலீசார் வெங்கடேசனிடம் விசாரணை மேற்கொண்ட போதும், இவர் அதனையே கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த போலீசார்ம், இவர் குப்பையை கொளுத்தும் போது ஏதாவது வெடிபொருள் வெடித்திருக்கலாம் அல்லது வெடிமருந்து தயாரிக்க முயன்ற போது இப்படி நடந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.