புதுமண தம்பதி வெட்டி கொலை : தூத்துக்குடியில் பரபரப்பு!

 

புதுமண தம்பதி வெட்டி கொலை : தூத்துக்குடியில் பரபரப்பு!

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொல்லப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி: காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொல்லப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தினரான சோலைராஜ் மற்றும் ஜோதி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு  பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர்.  

murder

இந்நிலையில், காற்று வரவில்லை என்று சோலைராஜ் மற்றும் ஜோதி இருவரும் வாசலில் படுத்து தூக்கியுள்ளனர். இதையடுத்து இன்று காலை 3 மணியளவில் அந்த தம்பதியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவர்களை சரமாரியாக வெட்டி  விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த தம்பதி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோலைராஜ், ஜோதி ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்கள் கவுரவ கொலை செய்யப்பட்டார்களா?  அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.