புதுப்பேட்டை பட ஜோடியின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு 

 

புதுப்பேட்டை பட ஜோடியின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு 

தனுஷ் – சினேகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவைடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியகியுள்ளது. 

சென்னை: தனுஷ் – சினேகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவைடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியகியுள்ளது. 

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாரி 2 திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷ் பிஸியாக நடித்து வருகிறார். இதில் தனுஷூக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். 

dhanush

அதையடுத்து தற்போது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதை ‘கொடி’ படத்தைத் இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கி வருகிறார். இப்படத்திலும்  கொடி படம் போலவே தனுஷ் இரட்டை வேடத்தில் வருகிறார். அதில் அப்பா – தந்தை என இரண்டு தனுஷில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். 

இந்நிலையில் கடந்த மாதம் குற்றாலத்தில் தொடங்கிய இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவு அடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: கவன ஈர்ப்பை பெறும் ஹாரர் காமெடி படங்கள்; மே மாதம் வெளியாகிறது ஜாம்பி