புதுத்துணி எடுத்துத் தராத கணவர்: குழந்தையின் கழுத்தை அறுத்து, தாய் தற்கொலை முயற்சி: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

புதுத்துணி எடுத்துத் தராத கணவர்: குழந்தையின் கழுத்தை அறுத்து, தாய் தற்கொலை முயற்சி: அதிர்ச்சி தரும் சம்பவம்!

குழந்தைக்குப் புத்தாடை வாங்கி தராத ஆத்திரத்தில் குழந்தையைக் கத்தியால் கழுத்தை அறுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: குழந்தைக்குப் புத்தாடை வாங்கி தராத ஆத்திரத்தில் குழந்தையைக் கத்தியால் கழுத்தை அறுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வடமாநிலத்தைச் சேர்ந்த  தம்பதி 

harassment

 

சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் பானு பிரசாத். இவருக்கு மம்தா என்ற மனைவியும் ராஜு என்ற குழந்தையும் உள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த பானுபிரசாத் அந்த பகுதியில் நடந்த 6 ஆண்டுகளாக பானிபூரி விற்கும் தொழில் செய்து வருகிறார். 

கணவன் மனைவி தகராறு

husband

 

இந்நிலையில் குழந்தை ராஜுவுக்கு பிறந்தநாள் என்பதால் தாய் மம்தா புத்தாடை எடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பணமில்லாத காரணத்தால், வேறு ஒருநாள் எடுத்துத் தருவதாகப் பானு பிரசாத் கூறியுள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்கும், தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பானு பிரசாத் பானிபூரி வியாபாரத்திற்குச் சென்றுள்ளார். 

உயிருக்கு போராடிய மம்தா மற்றும் குழந்தை

mumtha

 

இதையடுத்து கணவரின் மீது கோபத்திலிருந்த  மம்தா குழந்தையைக் கத்தியால் கழுத்து, கை கால்களில் அறுத்துள்ளார். மேலும் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதை தொடர்ந்து உயிருக்கு போராடிய மம்தா மற்றும் குழந்தையை ராஜூவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் வாசிக்க: ‘ராஜா ராணி’ சீரியல் சஞ்சீவ் கார்த்திக் – ஆல்யா மானஸா நிச்சயதார்த்தம்; ரசிகர்கள் வாழ்த்து!