புதுதில்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் நியமனம்

 

புதுதில்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் புதுதில்லி தலைவராக மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

புதுதில்லி: காங்கிரஸ் கட்சியின் புதுதில்லி தலைவராக மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும், கட்சியில் முக்கியப் பொறுப்புகளையும் வகித்த அஜய் மக்கான், புது தில்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஏற்றார். இவர் கடந்த 4-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திடீரென அஜய் மக்கான் காங்கிரஸ் முக்கியப் பொறுப்பில் இருந்து விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்ததாக அஜய் மக்கான் தெரிவித்தார்.

இந்நிலையில், அப்பதவிக்கு மூன்று முறை புதுதில்லி முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சி தலைமை ஒருவேளை தமக்கு புதுதில்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்குமாறு பணித்தால் அதனை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஷீலா தீட்சித் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.