புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ திடீர் தர்ணா போராட்டம்

 

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ திடீர் தர்ணா போராட்டம்

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் நியமன எம்.எல்.ஏ சாமிநாதன் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரி: தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் நியமன எம்.எல்.ஏ சாமிநாதன் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக்குகளுக்கு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் வருகிற ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில நியமன எம்.எல்.ஏ சாமிநாதன் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.