புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது !

 

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது !

காரில் இருந்து கீழே இறங்கித் தப்பியோட முயன்ற போது, அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் சாம்பசிவத்தை ஓட விட்டு அரிவாளால் வெட்டினர்.

புதுச்சேரியை அடுத்த கிருமாப்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இவர் காங்கிரஸ் பிரமுகர் சாம்பசிவம்(35). இவர் கடந்த 31ஆம் தேதி ஆம் தேதி அவரது தங்கையின் திருமணத்திற்காக உறவினர்களுக்குப் பத்திரிகை வைக்க தனது நண்பருடன் காரில்  கிருமாப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.

tttn

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது காரை வழிமறித்து, காரின் மீது நாட்டுக் குண்டு வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாம்பசிவம் காரில் இருந்து கீழே இறங்கித் தப்பியோட முயன்ற போது, அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் சாம்பசிவத்தை ஓட விட்டு அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ttn

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சாம்பசிவத்தின் மாமா, முன்னாள் கவுன்சிலர் வீரப்பன்  இதே போல வெட்டிக் கொல்லப்பட்டதால் அதற்குப் பழிவாங்கும் நோக்கோடு இந்த  கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சாம்பசிவத்தை கொலை செய்த 6 பேரை போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், வீரப்பனின் கொலைக்கு சாம்பசிவம் முக்கிய சாட்சி என்பதால் தான் அவரை கொலை செய்தோம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.