புதுச்சேரியில் 144 தடை உத்தரவு… முதலமைச்சர் அறிவிப்பு..

 

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு… முதலமைச்சர் அறிவிப்பு..

புதுச்சேரியில் நேற்று இரவு முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.  இத்தகைய இக்கட்டான சூழலில் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாலை 5 மணிக்கு கை தட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

narayanaswamy

அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு தனது வீட்டு பால்கனியில் கை தட்டி நன்றி செலுத்தினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி .அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று (மார்ச் 22) இரவு முதல் 31 ஆம தேதி வரை மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது என தெரிவித்தார்.

puducherry

மாநில எல்லைகள் சீல் வைக்கப்படும் எனவும், வெளி மாநில பேருந்துகள் நிறுத்தப்படும் எனவும், அரசின் இந்த கட்டுப்பாட்டுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.