புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம்!

 

புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம்!

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் நிலவுவதால், நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை  விடுத்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் நிலவுவதால், நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை  விடுத்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரேசன் அட்டை தாரர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகையை இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

Narayanasamy

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2000 அவர் அவர் வங்கி கணக்கில் வழங்கப்படும்  என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சமாளிக்க நிவாரணம் வழங்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.