புதுச்சேரியில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா உறுதி!

 

புதுச்சேரியில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா உறுதி!

அதில் பெரும்பான்மையான மக்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான். 

இந்திய மக்களை கொரோனாவில் இருந்து காக்க கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் பெரும்பான்மையான மக்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான். 

ttn

தென்னிந்தியாவிலேயே கொரோனா வைரஸ் குறைவாக பரவியுள்ள பகுதியாக புதுச்சேரி இருக்கிறது. இந்நிலையில், அங்கு டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய  இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5இல் இருந்து 7 ஆக உயர்ந்துள்ளது. அந்த இரண்டு பேரும் தற்போது அரசு கல்லாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.