புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை..!

 

புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் பருவ மழை நாளை முதல் துவங்கும் என எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தமிழகத்தில் பருவ மழை நாளை முதல் துவங்கும் என எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. பருவ மழை நாளை துவங்கவுள்ள நாழியில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது. சென்னையிலும் நேற்று கன மழை பெய்தது. 

Schools

கன மழைக் காரணமாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் படத்தையடுத்து, இன்று புதுக்கோட்டையில் கன மழை பெய்து வருவதால் மாணவர்கள் பள்ளிக் கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அம்மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.