புதிய மாவட்டங்களுக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை! அமைச்சர் எஸ்.பி வேலுமணி

 

புதிய மாவட்டங்களுக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை! அமைச்சர் எஸ்.பி வேலுமணி

sp velumani

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 27, 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில், தமிழகத்தில் 5 புதிய 5 மாவட்டங்களை  உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  உள்ளாட்சி தேர்தல்கள் நடைப்பெற இருக்கும் நிலையில், தமிழக அரசின் இந்த புதிய அரசாணை வெளியீட்டிற்கு பல தரப்பிலும் சந்தேகம் கிளம்பிய நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

election commission

புதியதாக 5 மாவட்டங்களை உருவாக்கியதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், 2020ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்  பணிகள் தொடங்கவிருப்பதால் டிசம்பர் 31க்குப் பிறகு எந்த ஒரு நிர்வாக அலகையும் புதிதாக ஏற்படுத்த முடியாது என்பதால் அதற்கு முன்பாக மாவட்டங்களைப் பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கானப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதால், பழைய எல்லை வரையறைப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.