புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் நினைவு தினம் : டிடிவி தினகரன் அஞ்சலி!

 

புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் நினைவு தினம் : டிடிவி தினகரன்  அஞ்சலி!

புதிய பார்வை ஆசிரியர் மற்றும் சசிகலாவின் கணவரும் ஆன ம.நடராஜன் உடல்நலக்குறைவால் கடந்த 2018 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி உயிரிழந்தார்.

புதிய பார்வை ஆசிரியர் மற்றும் சசிகலாவின் கணவரும் ஆன ம.நடராஜன் உடல்நலக்குறைவால் கடந்த 2018 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய இரண்டாவது ஆண்டு நினைவு தினமான இன்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சை ,விளார் பகுதியில் அமைந்துள்ள ம.நடராசனின்  நினைவிடத்துக்கு சென்று  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

TTN

அவருடன்   கழக துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்ட கழக செயலாளர் ராஜேஷ்வரன், தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் ம.சேகர் உடன் இருந்தனர்.