“புதன் கிழமை செயின் ,ஞாயிற்று கிழமை வளையல்” -ஒரே பொண்ணுக்கிட்ட தொடர்ந்து ஆட்டைய போட்ட கூட்டம் ..

 

“புதன் கிழமை செயின் ,ஞாயிற்று கிழமை வளையல்” -ஒரே பொண்ணுக்கிட்ட தொடர்ந்து ஆட்டைய போட்ட கூட்டம் ..

திருச்சூரில் வசிக்கும் சுதாகரன் என்பவரின் மனைவி ஷீலா புதன்கிழமை வீட்டிலிருக்கும்போது யாரோ கதவை தட்டிய சத்தம் கேட்டு கதவை திறந்த போது, திடீரென ஒருவர் அவரின் கழுத்திலிருந்து 5 பவுன் செயினை அறுத்துக்கொண்டு ஓடினார்.

கேரளாவில் திருச்சூரில் மடத்துர் பகுதியில் ஷீலா என்ற 50 வயது பெண்ணிடம் தொடர்ச்சியாக நகையை ஒரு கூட்டம் கொள்ளையடித்துள்ளது.
திருச்சூரில் வசிக்கும் சுதாகரன் என்பவரின் மனைவி ஷீலா புதன்கிழமை வீட்டிலிருக்கும்போது யாரோ கதவை தட்டிய சத்தம் கேட்டு கதவை திறந்த போது, திடீரென ஒருவர் அவரின் கழுத்திலிருந்து 5 பவுன் செயினை அறுத்துக்கொண்டு ஓடினார். ஆனால் அவர் செயினை இருக்க பிடித்ததால் செயினின் சிறு பகுதி மட்டுமே திருடன் கையில் சிக்கியது.
சிலநாள் கழித்து ஞாயிற்று கிழமை அவர் வீட்டு தோட்டத்திலிருந்து போது மீண்டும் அந்த திருடன் ஷீலாவை மயங்க செய்து விட்டு அவரின் தங்க வளையலை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். பிறகு அவரின் மகன் ராகுல் ஓடி வந்து பார்த்த போது, ஷீலாவின்  மயங்கிய நிலையை கண்டு அருகிலிருந்தவர்களை கூப்பிட்டார். அவர்கள் ஓடி வந்து ஷீலாவை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு இந்த சம்பவம் பற்றி போலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இப்போது அங்கு  cctv கேமெரா பொருத்தப்பட்டுள்ளது.