“புகார் கொடுக்க வந்தா கட்டிங் கொடுக்கணும்” : இளைஞரைத் தாக்கிய பெண் காவலர்!

 

“புகார் கொடுக்க வந்தா கட்டிங் கொடுக்கணும்”  : இளைஞரைத் தாக்கிய பெண் காவலர்!

லஞ்சம் கேட்பதாகவும், அப்படி கொடுக்க முடியாதபட்சத்தில் அவர்களை தாக்குவதாகவும் புகார் எழுந்தன. 

கோயம்புத்தூர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்  கிருஷ்ணவேணி. இவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வரும் நபர்களிடம் லஞ்சம் கேட்பதாகவும், அப்படி கொடுக்க முடியாதபட்சத்தில் அவர்களை தாக்குவதாகவும் புகார் எழுந்தன. 

ttn

இந்நிலையில், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். அவரை கிருஷ்ணவேணி தாக்குவதாக வீடியோ ஒன்று வெளியானது. இதுகுறித்த புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செல்ல, பெண் காவலர் கிருஷ்ணவேணி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் பெண் காவலரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்ட பின் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.