பீகாரில் மூளை காய்ச்சல்: இதுவரை 141 குழந்தைகள் பரிதாப பலி?!
பீகாரில் மூளை காய்ச்சல் நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது
முசாபர்பூர்: பீகாரில் மூளை காய்ச்சல் நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது
முசாபர்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான குழந்தைகளின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மூளைக் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த காய்ச்சலால் பீகாரில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குழந்தைகள் இறப்பிற்குக் காரணம் லிச்சி பழங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. லிச்சி பழங்களை வெறும் வயிற்றில் உண்டதால் தான் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ஒடிசா சுகாதார அமைச்சர் நாபா கிஷோர் தாஸ் மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் லிச்சி பழங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.