பீகாரில் பயங்கரம்… காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை!

 

பீகாரில் பயங்கரம்… காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை!

வட மாநிலங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னை எப்போதும் உள்ளது. இந்த நிலையில் பீகாரில் இன்று காலை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகேஷ் குமார் யாதவ் வழக்கம் போல ஜிம்முக்கு சென்றுள்ளார். ஜிம் அருகே வந்தபோது, எதிரே வந்த மர்மநபர்கள் திடீரென்று துப்பாக்கியால் ராகேஷ் குமாரை சுட்டுவிட்டு, மோட்டார் பைக்கில் தப்பினர். சுட்டுக் கொன்றவர்கள் யார், எதற்காக சுட்டனர் என்று எந்த தகவலும் தெரியவில்லை.

பீகாரில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகேஷ் குமார் யாதவ் இன்று காலை மர்ம நபர்களால் சுட்டுக்கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gun

வட மாநிலங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னை எப்போதும் உள்ளது. இந்த நிலையில் பீகாரில் இன்று காலை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகேஷ் குமார் யாதவ் வழக்கம் போல ஜிம்முக்கு சென்றுள்ளார். ஜிம் அருகே வந்தபோது, எதிரே வந்த மர்மநபர்கள் திடீரென்று துப்பாக்கியால் ராகேஷ் குமாரை சுட்டுவிட்டு, மோட்டார் பைக்கில் தப்பினர். சுட்டுக் கொன்றவர்கள் யார், எதற்காக சுட்டனர் என்று எந்த தகவலும் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, அரசியல் காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் டி.எஸ்.பி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் வைஷாலியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. ஆனால், அரசும் போலீசும் வேடிக்கை பார்த்து வருகிறது என்று சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் ராகேஷ் குமார் குற்றம்சாட்டியிருந்தார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.