பி.எச்.பாண்டியன் மறைவு! – ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இரங்கல்

 

பி.எச்.பாண்டியன் மறைவு! – ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இரங்கல்

பி.எச்.பாண்டியன் மறைவையொட்டி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
“அ.தி.மு.க சட்ட ஆலோசகரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

ph

கழக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த பி.எச்.பாண்டியன் அ.தி.மு.க தொடக்க காலத்திலிருந்து கொள்கை உறுதிமிக்க தொண்டராக பணியாற்றினார். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று அவர் ஆற்றிய பணிகள் அ.தி.மு.க-வுக்கு பேருதவியாக இருந்தன.

eps ops

சிறந்த வழக்கறிஞராகவும் பேச்சாளராகவும், அரசியல் வல்லுநராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராகவும், அ.தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவராகவும் பணியாற்றியவர் பி.எச்.பாண்டியன். அவரது இழப்பு அ.தி.மு.க-வுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால் அது மிகையில்லை.
பி.எச்.பாண்டியன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழக அமைப்புச் செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.