பிள்ளையாரை தொடர்ந்து சிவபெருமான் பால் குடித்தார்-வதந்தியால் கோவில்களில் பக்தர்கள் தலை ,ஏறிய பால் விலை ..

 

பிள்ளையாரை தொடர்ந்து சிவபெருமான் பால் குடித்தார்-வதந்தியால் கோவில்களில் பக்தர்கள் தலை ,ஏறிய பால் விலை ..

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரின் ஷாம்ஷெர்கஞ்ச் வட்டாரத்தில் உள்ள ஒரு கோவிலில் சிவபெருமான் ‘பால் குடிக்கிறார்’ என்ற வதந்தி பரவியதை அடுத்து, கோயிலுக்கு விரைந்த 13 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரின் ஷாம்ஷெர்கஞ்ச் வட்டாரத்தில் உள்ள ஒரு கோவிலில் சிவபெருமான் ‘பால் குடிக்கிறார்’ என்ற வதந்தி பரவியதை அடுத்து, கோயிலுக்கு விரைந்த 13 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டனர். 
ஷம்ஷெர்கஞ்சில் வசிக்கும் ராஜேஷ் கவுசல் என்பவர்  ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கோவிலில் சிவபெருமானின் சிலை பால் குடிப்பதாக வதந்தியை பரப்பியதால் போலிசார் அவரை கைது செய்தனர்.

sivan-milk

இப்படி வதந்தி பரவியதால், பக்தர்கள்  கோயிலை நோக்கி விரைந்து செல்வதைக் காண முடிந்தது, காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கஷ்டமாக  இருந்தது.
ஊரடங்கு உத்தரவுகளை மீறியதால்  13 பேர் மீது ஐபிசி பிரிவு 188 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
பொது மக்கள் இந்த நேரத்தில் எந்தவொரு வதந்திகளையும் நம்பாதீர்கள்  என்றும், ஊரடங்கு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் போலிசார் உள்ளூர்வாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.