பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால் மீது மனைவி போலீசில் புகார்!

 

பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால் மீது மனைவி போலீசில் புகார்!

பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால் மீது இவரது மனைவி  வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகப் புகார் கொடுத்துள்ளார்.

பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால் மீது இவரது மனைவி  வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகப் புகார் கொடுத்துள்ளார்.

ttn

பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால். இவரது மனைவி பிரியா. இவர் பெங்களூருவில் உள்ள கோரமங்களா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமணத்திற்கு முன்பு சச்சின் தாய், எங்கள் வீட்டில் கூடுதல் வரதட்சணை கேட்டார். அன்றிலிருந்து வரதட்சணை தொல்லையால் நான்  மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்பப்பட்டு வந்தேன். என் கணவரும் மாமியாரும் என்னை கொடுமை செய்து வந்தார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

ttn

இது குறித்து மடிவாலா காவல்துறை உதவி கமிஷனர் காரி பசவனகவுடா அளித்துள்ள பேட்டியில், சச்சின் பன்சால் மீது அவரது மனைவி புகாரை அளித்துள்ளார். அவர் தனது  சகோதரி ராதிகா கோயல் டெல்லியிலிருந்தபோது, சச்சின் அவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார் என்றும் அவர் என் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்ற  முயற்சி செய்தார். இதுகுறித்து கேட்டதற்குக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் என்னை அடித்தார் என்றும் கூறியுள்ளார். மேலும் அவரது புகாரில் தனது மாமியார் தன்னை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்’ என்று அந்த பேட்டியில்  கூறியுள்ளார்.