பிளாஸ்டிக் பைப்புகளை தட்டிக் கொண்டே நடுரோட்டில் ரவுடிசம்..ஆறு புள்ளிங்கோ கைது !

 

பிளாஸ்டிக் பைப்புகளை தட்டிக் கொண்டே நடுரோட்டில் ரவுடிசம்..ஆறு  புள்ளிங்கோ கைது !

புள்ளிங்கோ என்ற பேரை வைத்துக் கொண்டு இளைஞர்கள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

இப்போதெல்லாம் சாலை விதிகளை மீறி பைக்கில் தாறுமாறாக செல்வதும், பைக்கில் செல்லும் போதே கூச்சலிட்டுக் கொண்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இளைஞர்கள் செல்வதும் வாடிக்கையாகி விட்டது. இது மட்டுமில்லாமல், சமீப காலமாக புள்ளிங்கோ என்ற அடையாளம் வைரல் ஆகி வருகிறது. அந்த பேரை வைத்துக் கொண்டு இளைஞர்கள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

ttn

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் சில நாட்களுக்கு முன்பு இளைஞர்கள் ஆறு பேர் நடந்து சென்ற பொது மக்களை பயமுறுத்தும் வகையில்,  பிளாஸ்டிக் பைப்புகளை தட்டிக் கொண்டே 2 பைக்குகளில் டிரிபிள்ஸ் சென்றுள்ளனர். அந்த இளைஞர்கள் செய்வதைக் கண்டு கடுப்பான மற்றொரு வாகன ஓட்டி அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளார்.

ttn

அந்த வீடியோ மிகவும் வைரல் ஆகி, சென்னை காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது. வீடியோவை பார்த்த போலீசார் கடந்த சில நாட்களாக, பைக் எண்ணை வைத்து தேடி அந்த இளைஞர்களை வந்துள்ளனர். இந்நிலையில், இன்று திருவல்லிக்கேணி பகுதியில் அந்த இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும்  சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.