பிளாட்பாரத்தில் பிச்சையெடுத்த சிறுவனுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்!

 

பிளாட்பாரத்தில் பிச்சையெடுத்த சிறுவனுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் சென்னை ரயில் நிலையத்தில் பிச்சையெடுத்த சிறுவனை வீட்டிற்கு அழைத்து உதவி செய்துள்ளார்.

சென்னை: ராகவா லாரன்ஸ் சென்னை ரயில் நிலையத்தில் பிச்சையெடுத்த சிறுவனை வீட்டிற்கு அழைத்து உதவி செய்துள்ளார்.

 ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருலட்சுமி.  இவரது மகன் குரு சூரியாவுக்கு பிறந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்க முடியாமல் போனது.  அதன்பின்னர், பேசவும் முடியவில்லை. சீராக இயங்கிய இதயம் எப்போதும் படபட என்று அடிக்க தொடங்கியது. மிகவும் ஏழ்மையினால் அவர்களால் குருசூரியாவுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. 

இந்த நிலையில் சென்னை சென்று நடிகர் ராகவா லாரன்சை சந்தித்தால், அவர் தேவையான மருத்துவ உதவி செய்வர் என்று சிலர் சொல்ல அவர்கள் மூன்று பெரும் சென்னை புறப்பட்டு வந்தனர். ஆனால் அவர்களால் இங்கு ராகவா லாரன்ஸ் முகவரியை கண்டு பிடிக்கவில்லை. பின்பு அவர்களால் ஊருக்குத் திரும்பவும் முடியாமல், சூர்யாவுக்கு  சிகிச்சை அளிக்கவும் முடியாமல் கடந்த சில தினங்களாக பிளாட்பாரத்திலேயே தங்கி இருக்கிறார்கள்.லாரன்ஸ் முகவரியைக் கண்டு பிடிக்கும் வரை, பசிக்கு என்ன செய்வது? என்று யோசனை செய்து இருந்த வெங்கடேசன் நிலைமையைப் பார்த்து ரயில்வே பிளாட்பாரத்தில் இருப்பவர்கள்  தாங்களாகவே முன்வந்து 5, 10 கொடுத்துள்ளனர். 

lawrence

இந்த விஷயம் லாரன்ஸ் காதிற்குச் சென்றவுடன் அவர்களுக்கு உதவ முன் வந்தார். ஆம்.. பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும், இன்று காலையில் முதல் வேலையாகத் தனது உதவியாளரை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு காரில் அனுப்பி குரு லட்சுமியும், வெங்கடேசனையும் சந்தித்து  அழைத்து வர கூறியுள்ளார். 

பின்னர் 3 பேரையும் அவர் ராகவா லாரன்ஸ் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து கூறிய லாரன்ஸ் ‘ஒரு நம்பிக்கையோடு என்னைத் தேடி வந்த அவர்களுக்கு எனது அறக்கட்டளை மூலமாக தேவையான மருத்துவ உதவிகள் செய்வதோடு, மேலும் தேவைப்பட்டால் அரசின் உதவியையும் நாடுவேன்’ என்று கூறியுள்ளார்.