பிறந்த குழந்தையின் புகைப்படத்தை டிபி வைத்த அம்மா! சொந்தம் கொண்டாட வந்த 3 அப்பாக்கள்!! 

 

பிறந்த குழந்தையின் புகைப்படத்தை டிபி வைத்த அம்மா! சொந்தம் கொண்டாட வந்த 3 அப்பாக்கள்!! 

கொல்கத்தா மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 3 அப்பாக்கள் உரிமை கொண்டாட வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தா மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 3 அப்பாக்கள் உரிமை கொண்டாட வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சப்னா மைத்ரா என்ற கர்ப்பிணி பெண், அவருடைய கணவர் தீபன் கர்பால் என்பவருடன் வந்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் சப்னாவுக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை சப்னா வாட்ஸ் அப்பில் டிபியாக வைத்ததுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது என ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதனை பார்த்த ஹர்ஷா கேத்ரி, பிரதீப் ராய் ஆகிய இருவரும் சப்னாவுக்கு பிறந்த குழந்தை எங்களுடையது என சொந்தம் கொண்டாடிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர். இதனைபார்த்து சப்னாவின் கணவர் தீபனும், மருத்துவமனை நிர்வாகமும்  அதிர்ச்சியடைந்தது. இதுகுறித்து  ஹர்ஷா கேத்ரி, பிரதீப் ராய் ஆகிய இருவர் மீதும் நடாஜிநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் 

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், கணவன் எனக்கூறிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மூன்று பேருமே நான் தான் குழந்தைக்கு அப்பா என்ற வசனத்தை தொடர்ந்து கூறினர். இந்த சம்பவத்தை பார்த்து சப்னா அதிர்ச்சியும் அடையவில்லை, மறுப்பும் தெரிவிக்கவில்லை. அவர் வாயை திறந்து சொன்னால் மட்டுமே பெண் குழந்தைக்கு அப்பா யாரென்று தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.