பிறந்து 5 நாட்களே ஆன பெண் சிசுவை எருக்கம்பால் ஊற்றிக் கொன்ற தாய்.. தமிழகத்தில் தொடரும் அவலம்!

 

பிறந்து 5 நாட்களே ஆன பெண் சிசுவை எருக்கம்பால் ஊற்றிக் கொன்ற தாய்.. தமிழகத்தில் தொடரும் அவலம்!

கடந்த இரண்டு வாரத்திற்கு உசிலம்பட்டியில் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கடந்த இரண்டு வாரத்திற்கு உசிலம்பட்டியில் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து ஆண்டிபட்டியிலும் அதே போலப் பெண் சிசுக்கொலை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttt

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சுரேஷ்- கவிதா. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த பிப்.26 ஆம் தேதி மீண்டும் ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை திடீரென வயிற்றுவலியால் உயிரிழந்து விட்டதாகக் கூறி வீட்டின் அருகேயே குழந்தையைப் புதைத்துள்ளனர். ஆனால், குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாகச் சந்தேகம் அடைந்த ஊர்மக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். 

இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கவிதா தான் குழந்தையை எருக்கம்பால் ஊற்றி கொலை செய்ததாகத் தெரிய வந்துள்ளது. மாமியாரின் கொலை செய்யச் சொன்னதால் தான், என் குழந்தையைக் கொன்றேன் என்று கவிதா வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து கவிதா மற்றும் செல்லம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.