பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தை.. கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட கொடூரம்!

 

பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தை.. கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட கொடூரம்!

கழிவு நீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தையை கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதன் காரணமாக, தெருக்களை தூய்மை படுத்த துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையி, துப்புரவு பணியாளர் ஒருவர் கழிவு நீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தையை கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

தருமபுரி நரசிம்மாச்சாரி தெருவில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா அருகே இருக்கும் கழிவு நீர் கால்வாயை இன்று காலை துப்புரவு பணியாளர் சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அதில் வீசப்பட்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த குழந்தையை வெளியே எடுத்தவுடன் நகராட்சி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். 

ttn

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமாக அந்த குழந்தையை யார் தூக்கி வீசியது என்பதை கண்டறிய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.