பிறந்தநாள் விழாவில் ‘கேக்’ வெட்டாமல் அப்பா மகனை வெட்டினர்-இசையால் வந்த இம்சை …

 

பிறந்தநாள் விழாவில் ‘கேக்’ வெட்டாமல் அப்பா மகனை வெட்டினர்-இசையால் வந்த இம்சை …

வெள்ளிக்கிழமை இரவு பொரிவ்லி வெஸ்டில் உள்ள கோராய் நகரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சத்தமாக  இசையை  வாசித்து அடுத்தவர்களை இம்சை செய்ததால் அப்பாவும் அவரது மகனும் அண்டை வீட்டாரால் கத்தியால் குத்தப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு பொரிவ்லி வெஸ்டில் உள்ள கோராய் நகரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சத்தமாக  இசையை  வாசித்து அடுத்தவர்களை இம்சை செய்ததால் அப்பாவும் அவரது மகனும் அண்டை வீட்டாரால் கத்தியால் குத்தப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஷிங்கரேவின் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கொண்டாட்டத்தின் போது சத்தமாக இசை வாசிக்கப்பட்டதால், 30 வயதான ஒரு பக்கத்து வீட்டுக்காரர்  பல முறை எதிர்ப்புத் தெரிவித்ததோடு,இசையை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

gang-fight

இருப்பினும், ஷிங்கரேவும்  மற்றும் அவரது நண்பர்களும் இசை வாசிப்பதை நிறுத்த மறுத்துவிட்டனர். அதனால் ஆத்திரமுற்ற பக்கத்து வீட்டுக்காரர் அர்ஜுன் அவர்களிடம் சூடான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பிறகு   பிளம்பராக வேலை செய்யும் அவர் கத்தியை வெளியே எடுத்து அர்ஜுனின் முகத்திலும் தலையிலும் குத்தினார். அர்ஜுனின் மகன் இடையில் புகுந்து தடுக்க வந்தபோது அவரையும்  கழுத்தில் குத்தினான்.

தாக்குதலின் போது தந்தைக்கும் மகனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. முழு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் போரிவலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார். காயமடைந்த  55 வயதான அர்ஜுன் ஷிங்கரே (55) மற்றும் அவரது மகன் ராஜேஷ் ஷிங்கரே ஆகியோர்  போரிவ்லி வெஸ்டில் உள்ள கோராய் பஸ் டெப்போவுக்கு அருகில் மளிகை கடையை நடத்தி வருகிறார்.