பிரேமலதா, அன்புமணி ராமதாஸைக் கோர்த்துவிட்டு கிளம்பும் பகீர் மீம்ஸ்…

 

பிரேமலதா, அன்புமணி ராமதாஸைக் கோர்த்துவிட்டு கிளம்பும் பகீர் மீம்ஸ்…

கூட்டணியில் சேர்வதற்கு முன் 40க்கு 40 நாங்களே அள்ளிடுவோம். எங்களுக்கு 7 சீட்டா, 4 சீட்டா என்று ரகளை செய்து அதிமுகவில் இணைந்த பா.ம.க.வும் தேமுதிகவும் சொல்லிவைத்தாற்போல் டக் அவுட் ஆகியிருக்கும் நிலையில் அவர்கள் கூட்டணி பேசும்போது ஆடிய ஆட்டங்களை வலைதளங்களில் மக்கள் பந்தி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கூட்டணியில் சேர்வதற்கு முன் 40க்கு 40 நாங்களே அள்ளிடுவோம். எங்களுக்கு 7 சீட்டா, 4 சீட்டா என்று ரகளை செய்து அதிமுகவில் இணைந்த பா.ம.க.வும் தேமுதிகவும் சொல்லிவைத்தாற்போல் டக் அவுட் ஆகியிருக்கும் நிலையில் அவர்கள் கூட்டணி பேசும்போது ஆடிய ஆட்டங்களை வலைதளங்களில் மக்கள் பந்தி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

anbumani and premalatha

ஏழு சீட் வாங்கிய பிறகு பிரஸ்மீட் வைத்த அன்புமணி ராம்தாஸ் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்லத் தெரியாமல் எதற்கெடுத்தாலும் ‘தண்ணியக் குடி தண்ணியக் குடி’ என்று வெறியேற்றி தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கொண்டார். இன்னொரு பக்கம் வாங்கிய 4 தொகுதிகளயும் வைத்துக்கொண்டு அடுத்த தமிழக முதல்வர் நான் தான் என்பதுபோல் 50 ஜெயலலிதாவாக நடந்துகொண்டார் பிரேமலதா. குறிப்பாக பத்திரிகையாளர்களை வீட்டு வேலைக்காரர்களை விடக் கேவலமாக ஒருமையில் அழைத்தும், தவறான வார்த்தைகளைப் பிரயோகித்தும் அசிங்கப்படுத்தினார்.

meme

ரிசல்ட்? நேற்றும் இன்றும் வலைதளங்களில் அதிமுகவினரின் தோல்விகளை விட அன்புமணி, பிரேமலதா கோஷ்டிகளின் தோல்வியே அதிக ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. அதிலும் படையப்பாவின் பஞ்ச் வசனமான ‘அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்ல வாழ்ந்ததா சரித்திரமும் இல்லே…பூகோளமும் இல்லே’ என்று எக்காளம் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.