பிரேசில்: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!!

 

பிரேசில்: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!!

பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று அசத்தினார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் துப்பாக்கி சுடுதலில் உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. உலகமெங்கிலுமிருந்து பலரும் இதில் பங்கு பெற்று வருகின்றனர். இத்தொடரில் தமிழகத்தில் உள்ள கடலூரைச் சேர்ந்த இளவெனில் எனும் வீராங்கனை 10 மீட்டர் ஏர் ரைபிள் சீனியர் பிரிவில் பங்கு பெற்றார்.

பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று அசத்தினார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

elavenil

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் துப்பாக்கி சுடுதலில் உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. உலகமெங்கிலுமிருந்து பலரும் இதில் பங்கு பெற்று வருகின்றனர். இத்தொடரில் தமிழகத்தில் உள்ள கடலூரைச் சேர்ந்த இளவெனில் எனும் வீராங்கனை 10 மீட்டர் ஏர் ரைபிள் சீனியர் பிரிவில் பங்கு பெற்றார்.

இவர் சுற்றுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இறுதிப் போட்டியில் மிகப் பெரிய சாதனை படைத்து தங்கத்தை வென்றுள்ளார் அதாவது இறுதிப்போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது புதிய சாதனையாக உள்ளது.

elavenil

இல வெனில் இதற்கு முன்னர் ஜூனியருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். தற்போது சீனியர் பிரிவில் இவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சீனியர் பிரிவில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார் இதற்கு முன்னர் அஞ்சலி பாகத், சண்டேலா ஆகிய இருவரும் இதே பிரிவில் இந்தியாவிற்காக தங்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

elavenil

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பிரேசிலில் நடந்த துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த தமிழக வீராங்கனை இளவேனில் வளர்வானுக்கு பாராட்டுக்கள் என்றார்.